கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் சபை அமர்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று 10 மணியளவில் இன்று ஆரம்பமானது. சபை ஆரம்பித்ததும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
விவாதங்களின் பின்னர் வாக்களிப்பு க்கு விடப்பட்டது. 35 உறுப்பினர்கள் உள்ள சபையில் 34 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17 பேரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவரும், ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும், தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 8 பேரும் எதிராக வாக்களித்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தார். இந்த நிலையில் 9 மேலதிக வாக்குகளால் கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி